search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்கள்
    X

    கூடலூர் அருகே லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்கள்

    கூடலூர் அருகே லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    போலீசாரைக் கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. இருந்தபோதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். விடுதி உரிமையாளரான குமார், குமுளியைச் சேர்ந்த புஷ்பராஜ், கேரள மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஹரீஷ், ஜோதி, கொச்சு மோன், ரகு, சபீக் உள்பட 20 பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×