என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்கள்
Byமாலை மலர்1 Sep 2018 11:21 AM GMT (Updated: 1 Sep 2018 11:21 AM GMT)
கூடலூர் அருகே லாட்ஜில் பணம் வைத்து சூதாடிய கேரள வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
போலீசாரைக் கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. இருந்தபோதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். விடுதி உரிமையாளரான குமார், குமுளியைச் சேர்ந்த புஷ்பராஜ், கேரள மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஹரீஷ், ஜோதி, கொச்சு மோன், ரகு, சபீக் உள்பட 20 பேர்களை கைது செய்தனர். அவர்களிடம் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X