என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடியில் லாட்ஜில் பிணமாக கிடந்த நகராட்சி ஊழியர்
போடி:
போடி சுப்புராஜ்நகரை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது73). ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர். நேற்று காலை நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் போடி நகர்பகுதியில் உள்ள லாட்ஜில் மர்மமான முறையில் முதியவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போடி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு லாட்ஜ் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் சுப்புராஜ் காலையில் அறை எடுத்து தங்கியதாகவும், ஆனால் அதன்பிறகு கதவு திறக்கப்படாமலேயே இருந்ததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாகவும் தெரிவித்தனர். அங்கு சுப்புராஜ் சேரில் அமர்ந்தபடி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சுப்புராஜ் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்