என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய பிளஸ்-2 வாலிபருக்கு வலை
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது 16 வயது மகள் சருக்கு பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் தனது மகளின் தோழிகளிடம் விசாரித்தனர். அதில் அதே பள்ளியில் படிக்கும் மாணவருடன் அவர் பழகி வந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தங்கராஜ் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்னக் கொடி மகன் ராஜேஷ். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதாகவும், அவர்தான் தனது மகளை கடத்திச் சென்றிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச் சென்ற மாணவரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்