search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படப்பை அருகே கார் மீது லாரி மோதல் -  2 பேர் பலி
    X

    படப்பை அருகே கார் மீது லாரி மோதல் - 2 பேர் பலி

    படப்பை அருகே கார் மீது லாரி மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்தவர் முகமது பர்வேஸ் (26). இவர் பெரிய காஞ்சீபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருடைய நண்பர் அனாஸ் முகமது (21). இவர்களுடன் மேலும் 5 பேர் ஒரே காரில் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் படப்பை அருகே கார் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் முகமது பர்வேஸ், அனாஸ் முகமது இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    கார் டிரைவர் விக்னேஷ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்கள் அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களும் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டுள்ளது. மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×