என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம்- பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்1 Sep 2018 6:55 AM GMT (Updated: 1 Sep 2018 6:55 AM GMT)
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Modi #PMModi #PonRadhakrishnan
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பொருளாதார தவறுகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது.
மோடி அரசில் வாகனங்கள், விவசாயம், தொழிற் உற்பத்தி, தொழில்முனைவோர் முன்னேற்றம், தொழில் தொடர்பான வாகனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. உலகளவில் நம்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கு காரணம் பிரதமர் மோடியின் துணிச்சலான தேச பக்தியான நடவடிக்கைகள்தான்.
மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு ராகுல்காந்தி உள்பட மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மகாராஷ்டிரா உயர் போலீஸ் அதிகாரி, ஆயிரக்கணக்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற மாதிரி அவசரப்பட்டு ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற கட்சியினர் அறிக்கை வெளியிடக்கூடாது. இன்று வரை ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசி வருகிறோம்.
அதே போல ஒரு கொலை மீண்டும் நடக்க வேண்டுமா? அதற்கு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை எந்த வழியில் கொலை செய்தார்களோ அதே வழிமுறையை பின் பற்றி பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணையாக அமைந்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை உள்பட பல சம்பவங்கள் நடந்தது. அதுபோல இந்த ஆட்சியிலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.
ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் தமிழர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து தமிழக அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Modi #PMModi #PonRadhakrishnan
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பொருளாதார தவறுகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது.
மோடி அரசில் வாகனங்கள், விவசாயம், தொழிற் உற்பத்தி, தொழில்முனைவோர் முன்னேற்றம், தொழில் தொடர்பான வாகனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. உலகளவில் நம்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கு காரணம் பிரதமர் மோடியின் துணிச்சலான தேச பக்தியான நடவடிக்கைகள்தான்.
மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு ராகுல்காந்தி உள்பட மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மகாராஷ்டிரா உயர் போலீஸ் அதிகாரி, ஆயிரக்கணக்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார்.
அவர்கள் பயங்கரவாதிகள் திரைமறைவில் இருந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொலை செய்யும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற மாதிரி அவசரப்பட்டு ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற கட்சியினர் அறிக்கை வெளியிடக்கூடாது. இன்று வரை ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசி வருகிறோம்.
அதே போல ஒரு கொலை மீண்டும் நடக்க வேண்டுமா? அதற்கு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை எந்த வழியில் கொலை செய்தார்களோ அதே வழிமுறையை பின் பற்றி பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணையாக அமைந்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை உள்பட பல சம்பவங்கள் நடந்தது. அதுபோல இந்த ஆட்சியிலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.
ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் தமிழர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து தமிழக அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Modi #PMModi #PonRadhakrishnan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X