search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் - பேருந்து விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
    X

    சேலம் - பேருந்து விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

    சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 7 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பெங்களுருவில் இருந்து ஏற்காடு சென்ற தனியார் பேருந்தும், சேலத்தில் இருந்த் தர்மபுரி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 30-க்கு மேற்பட்டோர் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தால் சேலம் - பெங்களூர் தெசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், அதிகாலையில் விபத்து ஏற்பட்டதை அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அதிகாலையில் இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானது சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BusAccident
    Next Story
    ×