search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலத்தில் 2-ந் தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்
    X

    நீடாமங்கலத்தில் 2-ந் தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நீடாமங்கலத்தில் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdinakaran
    மன்னார்குடி:

    காவிரியில் நீர் கரை புரண்டோடும் நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள்,குளங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும்  பலலட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளது. ஆறு, குளங்கள், ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்த முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் எம்,ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சியின் அமைப்புச்செயலாளர் சிவா.ராஜ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், நகர செயலாளர் எஸ்.சங்கர்  மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணி , வாகனங்கள் நிறுத்து மிடங்களையும் தேர்வு செய்து பார்வையிட்டனர். #ttvdinakaran 
    Next Story
    ×