search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசீந்திரம் அருகே இளம்பெண் தற்கொலை
    X

    சுசீந்திரம் அருகே இளம்பெண் தற்கொலை

    சுசீந்திரம் அருகே நோய் குணமாகாததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது46). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் செல்விக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த செல்வி 29-ந்தேதி தீக்குளித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடி மேலச்சரக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாய். இவரது மனைவி பத்மாவதி(50). இவர் கடந்த 29-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
    Next Story
    ×