search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எருக்கூர் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    எருக்கூர் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    எருக்கூர் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர், அரசூர், கூத்தியாம் பேட்டை, மணலகரம், மாத்தால மடையம், தெற்குவெளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 75, ஏக்கர் நிலபரப்பு பாசனவசதி பெற்று வருகின்றது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை கடைமடை பகுதியான எருக்கூர் கழுதை வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், எருக்கூர் கிராமத்தில் முக்கிய பாசன வாய்க்காலாக கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமோ வராதோ என்ற அச்சத்துடன் சாகுபடி பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

    இது குறித்து பொதுபணி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே எருக்கூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    Next Story
    ×