என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கிராம நிர்வாக அலுவலர் மனைவியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்30 Aug 2018 11:40 AM GMT (Updated: 30 Aug 2018 11:40 AM GMT)
தேனி அருகே வீடுபுகுந்து ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மனைவியிடம் நகைபறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே வீரபாண்டி காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பாண்டியம்மாள். நேற்றிரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுகதவின் தாழ்ப்பாளை உடைத்து நைசாக உள்ளே புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த பாண்டியம்மாள் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். திடீரென கண்விழித்த பாண்டியம்மாள் தங்கச்சங்கிலியை கையோடு பிடித்துக்கொண்டு கொள்ளையனிடம் போராடினார்.
இருந்தபோதும் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பிஓடினான்.
அக்கம் பக்கத்தினர் துரத்திய போதும் கொள்ளையன் சிக்கவில்லை. இதனால் வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து சங்கிலி பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X