search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து தொழிலாளி பலி
    X

    தஞ்சை அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து தொழிலாளி பலி

    தஞ்சை அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே பள்ளி யக்ரஹாரம் கடை தெருவைச் சேர்ந்தவர் சிவநேசன். இவரது மகன் சூரியகுமார் (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சூரியகுமார் கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய சிவகுமாருக்கு அதிகமாக கடன் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சூரியகுமார் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் சூரியகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

    இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×