search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு சோலார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
    X

    ஈரோடு சோலார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

    ஈரோடு சோலார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் அருகே பூந்துறை ரோட்டில் 60 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    அந்த பெண் பெயர் லட்சுமி என்றும் பல ஆண்டாக குடும்பத்தை பிரிந்து அந்த பகுதியில் பிச்சை எடுத்த பிழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    ரோட்டில் லட்சுமி சம்பவத்தன்று நடந்து வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி படுகாயத்துடன் கிடந்தார். பிறகு 108 ஆம்புலன்சு மூலம் அந்த பெண்ணை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேரத்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பெண்ணின் உறவினர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×