search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி தகவல்
    X

    மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி தகவல்

    மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MetturDam #EdappadiPalaniswami
    சேலம்:

    எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், எத்தனை திமுக வந்தாலும் அதிமுகவையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும், பிற கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்ய அதிமுக தயாராக இல்லை என்றும் கூறினார்.



    ‘மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு அணை உடையும் அபாயத்தில் உள்ளதாக கூறுவது தவறான கருத்து. முக்கொம்பு பகுதியில் புதிய அணை கட்டப்படும்’ என்றும்  முதலமைச்சர் தெரிவித்தார். #MetturDam #EdappadiPalaniswami

    Next Story
    ×