search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரம்பசுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதலமைச்சர்  திறந்துவைத்து அம்மா குழந்தைகள்நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
    X
    ஆரம்பசுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்து அம்மா குழந்தைகள்நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

    தடுப்பணைகள் கட்டும் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவடையும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    தடுப்பணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    அம்மாவின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்முடைய சேலம் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. கொங்கணாபுரம், சித்தூர், பனமரத்துப்பட்டி, மல்லியகரை போன்ற 12 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு போதிய அளவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதியதாக 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டு, கட்டப்பட்டு இருக்கின்றன.

    நீர் எவ்வளவு வீணாகி கடலில் கலக்கின்றது என்பதை கணக்கீட்டு, எந்தந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். எந்தந்த நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். எந்த பகுதியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, எந்தந்த பகுதிக்கு நீர் விநியோகம் செய்ய முடியும். எந்த ஏரியில் நீர் நிரப்ப முடியும் என்ற ஓர் ஆய்வு பணியை மேற்கொண்டு, அந்த பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    பருவ மழை காலத்தில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கின்றது. அப்படி பெய்கின்ற மழை நீர் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள், ஓடைகள் வழியாக நாம் சேமித்து வைக்கின்ற நீர் மூலமாக நிலத்தடி நீர் உயரும்.

    ஆகவே, அப்படிப்பட்ட பணிகளை செய்வதற்காக முதற்கட்டமாக அம்மாவுடைய அரசு நிதி ஒதுக்கி 1519 ஏரிகளை எடுத்து அந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. அம்மாவுடைய அரசு குடிமாரமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொடுத்து இன்றைக்கு அந்த திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் மூலமாக நதிகள், ஓடைகள் மூலமாக தண்ணீரை தேக்கி நீரை சேமித்து மக்களுக்கு வழங்குகிற ஆட்சி அம்மாவுடைய ஆட்சி என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    அதுபோல தடுப்பணைக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

    ஏரியில், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண் பல ஆண்டுகளாக அள்ளப்படாமல் இருந்தது. வண்டல் மண் படித்த காரணத்தினாலே நீரின் கொள்ளளவு குறைந்து விட்டது. அந்த நீரின் அளவை அதிகரிக்கவும், அதே நேரத்தில் வண்டல் மண்ணை அள்ளுவதன் மூலமாக விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு உரம் இடுவதற்கு பதிலாக இந்த வண்டல் மண் பயன்படுத்தப்படுகிறது.

    வண்டல் மண் அள்ளுவதால் ஏரிகள் ஆழமாகிறது. இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலமாக இயற்கை உரமாக இது பயன்படுகிறது.


    மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டு காலமாகிறது. 83 ஆண்டு காலமாக அந்த அணையில் இருந்து தூர்வாரப்படவில்லை. ஆகவே அம்மாவுடைய அரசு மேட்டூர் அணையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தினந்தோறும் 3 ஆயிரம் லாரிகள் மூலமாக நம்முடைய விவசாய பெருமக்கள் வண்டல் மண்ணை எடுத்து தங்களுடைய நிலத்திற்கு பயன்படுத்தினர்.

    இப்படிப்பட்ட சரித்திர சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம். இது மக்களுடைய அரசு, விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளுக்கு தேவையான அத்தனை நண்மைகளையும் செய்யக் கூடிய அரசு. விவசாயிகள், தொழிலாளர்கள் வளம் பெறுவதற்கான அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பகுதியில் மருத்துவமனை அமைந்திருக்கின்றது. மருத்துவமனை அமைந்த காரணத்தினாலே இங்கு சந்தை அமையாமல் போய் விடும் என்ற தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே, இந்த பகுதியில் எப்படி சந்தை கூடியதோ, அதே போல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுவதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    Next Story
    ×