என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்29 Aug 2018 2:15 PM GMT (Updated: 29 Aug 2018 2:15 PM GMT)
கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளம்வைதி (வயது 32).இவரது மனைவி கனிமொழி (27) . இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நித்தீஸ் (6) தீபக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இளம்வைதி சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வார். நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கனிமொழி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். கனிமொழியின் தந்தை கண்ணையன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் கனிமொழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கனிமொழி தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X