search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை
    X

    சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

    தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் முத்தமிழரசி (வயது 21). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இந்நிலையில் முத்தமிழரசி மற்றும் உடன்பிறந்தவர்கள் கற்பகவல்லி, ஹரிகரன் ஆகியோர் தட்டார்மடம் பெரியப்பா முத்துவேல் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக முத்தமிழரசிக்கு தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 27-ந் தேதி விஷத்தை குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முத்தமிழரசி இறந்தார்.  

    இது குறித்து தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×