search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறு அருகே வாகனம் மோதி விவசாயி பலி
    X

    கயத்தாறு அருகே வாகனம் மோதி விவசாயி பலி

    கயத்தாறு அருகே நடந்து சென்ற விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளத்தை சேர்ந்தவர் சாமுவேல்.  இவரது மகன் ஆபிரகாம் (வயது 55). விவசாயியான இவர் கடந்த 4-ந் தேதி ஆத்திகுளம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×