search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லத்தில் முன்விரோத தகராறில் தம்பதி மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    வல்லத்தில் முன்விரோத தகராறில் தம்பதி மீது தாக்குதல்- வாலிபர் கைது

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே முன்விரோத தகராறில் தம்பதி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வல்லம்:

    வல்லம் வெள்ளாளத்தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது55). இவருடைய மனைவி மகாலட்சுமி(30). மணிவேலு தந்தை ஆறுமுகம், தாய் மூக்காயி, தம்பி காசிநாதன்.

    மணிவேலுக்கும், அவரது தந்தை மற்றும் தம்பி ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மணிவேல் வீட்டிற்கு வந்த 3 பேரும் உருட்டுக்கட்டையால் அவரையும், மகாலட்சுமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுபற்றி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.
    Next Story
    ×