என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மீண்டும் மழை - முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்29 Aug 2018 10:35 AM GMT (Updated: 29 Aug 2018 10:35 AM GMT)
கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X