என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வந்தது. மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு வெயில் கொளுத்தியது.
இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது.
இந்நிலையில் ஈரோடு மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லேசான மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமான 8 மி.மீ மழை பெய்ந்தது.
நேற்றும் 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.
இதே போன்று தாளவாடி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதியிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் கருமேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த மழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-
வரட்டுப்பள்ளம்-11.8, அம்மாபேட்டை-6.4, ஈரோடு -6, தாளவாடி -4.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்