search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய கும்பல்
    X

    நிலக்கோட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய கும்பல்

    நிலக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையை சேர்ந்தவர் சவுந்தரம்(வயது45). இவருக்கும் அக்ரஹாரப்பட்டியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பெட்ரோல் பங்கில் சவுந்தரம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சக்திவேல், அஜித்குமார், வினித்குமார், அர்ஜூனன், முருகன், அழகுராஜா ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்பு தகாதவார்த்தைகளால் திட்டி சவுந்திரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×