என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூரில் மூதாட்டியை தாக்கி 15 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்29 Aug 2018 7:33 AM GMT (Updated: 29 Aug 2018 7:33 AM GMT)
திருச்செந்தூரில் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சுகுமார். இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சுகுமாரின் மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
மகன் வானுமாமலை பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வானுமாமலையின் இரண்டாவது மகளான 1½ வயது குழந்தை சுகஸ்னா அழுது கொண்டிருந்தாள். இதையடுத்து பாட்டி பிரேமா தனது பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக சென்ற திருச்செந்தூர் பயணிகள் ரெயிலை பேத்திக்கு காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிரேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டான்.
பிரேமாவிடம் இருந்த பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். தன்னிடம் மர்ம நபர் நகை பறித்தது குறித்து பிரேமா திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சுகுமார். இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சுகுமாரின் மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
மகன் வானுமாமலை பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வானுமாமலையின் இரண்டாவது மகளான 1½ வயது குழந்தை சுகஸ்னா அழுது கொண்டிருந்தாள். இதையடுத்து பாட்டி பிரேமா தனது பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக சென்ற திருச்செந்தூர் பயணிகள் ரெயிலை பேத்திக்கு காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிரேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டான்.
பிரேமாவிடம் இருந்த பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். தன்னிடம் மர்ம நபர் நகை பறித்தது குறித்து பிரேமா திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X