search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே புதுப்பெண்-மாணவி உள்பட 3 பேர் மாயம்
    X

    திருவள்ளூர் அருகே புதுப்பெண்-மாணவி உள்பட 3 பேர் மாயம்

    திருவள்ளூர் அருகே புதுப்பெண்-மாணவி உள்பட 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் வெங்கடம்மாள்(30) பிகாம் பட்டதாரி. இவருக்கு வருகிற செப்டம்பர் 12-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமண பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெங்கடம்மாளை காணவில்லை. அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுவேல் இவரது மகள் தமிழரசி(17) கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் யுகா (19) கடந்த 17-ம் தேதி கடைக்கு சென்ற யுகாவை காணவில்லை . இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×