என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே புதுப்பெண்-மாணவி உள்பட 3 பேர் மாயம்
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகள் வெங்கடம்மாள்(30) பிகாம் பட்டதாரி. இவருக்கு வருகிற செப்டம்பர் 12-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமண பத்திரிகை விநியோகம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வெங்கடம்மாளை காணவில்லை. அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுவேல் இவரது மகள் தமிழரசி(17) கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் யுகா (19) கடந்த 17-ம் தேதி கடைக்கு சென்ற யுகாவை காணவில்லை . இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்