search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து ஸ்டாலின் அலங்கரிப்பார் - ஈஸ்வரன்
    X

    தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து ஸ்டாலின் அலங்கரிப்பார் - ஈஸ்வரன்

    தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து அலங்கரிப்பார் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.-

    தி.மு.க.வின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    இயக்கத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் திறமை படைத்த நீங்கள் (ஸ்டாலின்) சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். ஒவ்வொரு பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே அந்தப் பணியை செய்து கொண்டிருக்கின்ற பெருமை புதிய தி.மு.க தலைவருக்கு உண்டு.

    துணை முதல்வராக ஆவதற்கு மூன்று ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருந்தவர். செயல் தலைவராவதற்கு 10 ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை செய்து கொண்டிருந்தவர்.

    கடந்த 5 ஆண்டுகளாகவே தி.மு.கவை வழி நடத்துகின்ற பொறுப்பை ஏற்று தலைவருக்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தவர்தான் ஸ்டாலின். இப்படித்தான் அவருக்கு பதவிகள் வந்திருக்கின்றன. மிக மிக பொறுமையாக இருந்துதான் இப்போது தலைவராகியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஒரு மாநில முதல்வர் எப்படி இயங்க வேண்டுமோ அப்படித்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து அலங்கரிப்பார் மு.க.ஸ்டாலின்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருக்கின்ற மூத்த தலைவர் மரியாதைக்குரிய துரைமுருகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறி உள்ளார்.
    Next Story
    ×