என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் ஆய்வு
Byமாலை மலர்28 Aug 2018 2:12 PM GMT (Updated: 28 Aug 2018 2:12 PM GMT)
புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் வருகிற 10ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த அரசு பொருட்காட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைத்தல், அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததுடன், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மத்திய தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் வருகிற 10ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த அரசு பொருட்காட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைத்தல், அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததுடன், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மத்திய தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X