search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனரக வாகன போக்குவரத்தால் கல்லணை பாலங்கள் உடையும் ஆபத்து
    X

    கனரக வாகன போக்குவரத்தால் கல்லணை பாலங்கள் உடையும் ஆபத்து

    கல்லணை பாலங்களில் தொடர்ந்து வேகமாக அதிகபாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிர்வு பாலத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
    பூதலூர்:

    உலகிலேயே ஓடும் ஆற்றின் குறுக்கில் ஒரு அணைகட்ட இயலும் என்பதை நிருபிக்கும் அணையாக திகழ்வது மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும்.

    பெரும் பாறைகளை கொண்டு கட்டப்பட்ட கல்லணை பெரும் வெள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. கடுமையான புயல் வெள்ளம், இடி போன்றவை கல்லணை தாக்கிய போதும் எவ்விதமாக சேதமும் இன்றி காவிரி பாசன பகுதி நீர் பங்கீட்டை சரியாக செய்து வந்துள்ளது.

    கல்லணை. கொள்ளிடம். காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், தோகூர் வடிகால் வாய்க்கால் என பாலங்கள் அதன் மீது நீரை பங்கீட்டு வழங்கிட மாபெரும் ‌ஷட்டர்கள், ‌ஷட்டர்களை இயக்கிட மின் அமைப்புகள் என வலுவான அடித்தளத்துடன் அமைந்து காவிரி பாசன பகுதிகளை காத்து வருவது கல்லணை.

    இங்குள்ள காவிரி பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த காலத்தில் திருச்சியில் இருந்து பஸ்களில் வருபவர்கள் தோகூர் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து வெண்ணாற்று கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறிச் செல்வார்கள்.

    இதே போல் திருவானைக்காவல் பகுதியில் இருந்து பஸ்சில் வருபவர்கள் கல்லணை கிளிக்கூடுகிராமத்தின் அருகில் இறங்கி கொள்ளிடம் பாலத்தை கடந்து திருகாட்டுப்பள்ளிக்கு பஸ் ஏறுவார்கள்.

    பண்டைய காலங்கயில் அதிகஅளவில் கார்கள், மினிலாரிகள், மினி வேன்கள் இல்லாத காலமாக இருந்ததால் மக்கள் பஸ்களை மட்டுமே நம்பி இருந்த காலம் அப்போது அணையின் மீது நடந்து வருபவர்களே அதிகமாக இருந்தார்கள்.

    காலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது அதிகஅளவில் வாகனங்கள் பெருகி விட்டன. கல்லணை பாலங்களில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பயணிகளை ஏற்றி கொண்டு வேன்கள், கார்கள் , பெரிய வேன்கள், கல்லூரி பஸ்கள் தாராளமாக பாலங்களில் சென்று வருகின்றன.

    மேலும் மினி வேன்களில் விவசாய விளை பொருட்களை ஏற்றிக் கொண்டும் பாலங்களை கடந்து சென்று கொண்டுள்ளன. இது மட்டும் அல்லாமல் போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மணலும்கூட மின் வேன்கள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுலாதலமாக இருப்பதால் திருச்சி, தஞ்சையில் இருந்து விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் கார்கள், வேன்களில் வந்து வண்ணம் உள்ளனர். இந்த வாகனங்கள் வேகமாக செல்லும் பாலத்திற்கு சேதம் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். எனவே கல்லணை பாலங்களில் வாகனப்போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். தொடர்ந்து வேகமாக அதிகபாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிர்வு பாலத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கோவில்பத்து தங்கமணி கூறுகையில் அந்த காலத்தில் திருச்சிக்கு வைக்கோல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும் போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஓட்டிக் கொண்டு செல்வோம். இப்போது சர்வசாதாரணமாக நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டும் வாழைத்தார்கள், காய்கறிகள் ஏற்றிக் கொண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டும் ஏராளமான வாகனங்கள் பாலங்களில் அதிவேகமாக சென்று வருகின்றன. முக்கொம்பு பாலம் சேதமடைந்தது போல் கல்லணை பாலமும் சேதமடையாமல் காப் பாற்றப்பட வேண்டுமானால் கல்லணை பாலங்களில் அனைத்து வாகனப்போக்குவரத்தையும் தடைசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×