என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளியின் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்28 Aug 2018 11:10 AM GMT (Updated: 28 Aug 2018 11:10 AM GMT)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூசியாநகரில் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் அருகே அதேபகுதியை சேர்ந்த முருகன்(35) என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது.
இரு கைகளும் இல்லாத நிலையில் முருகன் பெட்டிக்கடை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முருகன் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் கடன் நிலுவை தொகை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முருகன் கடையில் பணம் வைத்திருப்பதை அறிந்தே மர்ம நபர் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
தூத்துக்குடி லூசியாநகரில் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் அருகே அதேபகுதியை சேர்ந்த முருகன்(35) என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது.
இரு கைகளும் இல்லாத நிலையில் முருகன் பெட்டிக்கடை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முருகன் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் கடன் நிலுவை தொகை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் இதுபற்றி சிப்காட் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முருகன் கடையில் பணம் வைத்திருப்பதை அறிந்தே மர்ம நபர் திட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளியின் கடையை உடைத்து மர்மநபர் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X