search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே லாரி மோதி விவசாயி பலி
    X

    ஒரத்தநாடு அருகே லாரி மோதி விவசாயி பலி

    ஒரத்தநாடு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே தென்னம நாட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது40) விவசாயி.

    இவர் நேற்று இரவு ஒரத்தநாடு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தென்னமநாடு நோக்கி சென்றார். அவர் ஒரத்தநாடு அருகே வல்லம் பிரிவு ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த லாரி முருகானந்தம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான முருகானந்தத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×