search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் ரெயில் மோதி வாலிபர் பலி
    X

    நாகையில் ரெயில் மோதி வாலிபர் பலி

    நாகையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த டாட்டா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். மீனவர். இவருடைய மகன் சிவா (வயது 25). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்காக கீரைக்கொல்லை தெரு ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவா மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×