search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம்-வேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை
    X

    குன்னம்-வேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை

    குன்னம் மற்றும் வேப்பந்தட்டை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மற்றும் கழனிவாசல் ஆகிய 2 துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, எறையூர், பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், கிளிïர், எழுமுர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைகுடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவென்மணி, பெரியம்மாபாளையம், கல்லம்புதூர், என்.புதூர், நெய்குப்பம், பிம்பலூர், பாண்டகப்பாடி, பசும்பலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை, வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி, தழுதாழை, பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், நூத்தப்பூர், கை.களத்தூர், காரியானூர், வெள்ளுவாடி, சிறுநிலா ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×