என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. திடீர் மரணம்
ஈரோடு:
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்தவர் மனோகரன் (வயது 57). பல்லடத்தில் சட்டம்- ஒழுங்கு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து பிறகு அங்கிருந்து ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
இவரது சொந்த ஊர் கோவை அருகே உள்ள சூலூர் கலந்தர் ஆகும். மனைவி பெயர் சுதா. இவரது மகனுக்கு கடந்த 25-ந்தேதி திருமணம் நடந்தது. விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தார். இன்று (திங்கட்கிழமை) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. அதற்கான வேலைகளில் டி.எஸ்.பி. மனோகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இன்று காலை 11.30 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பேரிடியாக விழுந்தது. திருமண வரவேற்பு வீடு துக்க வீடாக மாறியது.
மாரடைப்பில் இறந்த டி.எஸ்.பி. மனோகரன் உடலுக்கு போலீசாரும் உறவினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்