search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி
    X

    ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்ற வாலிபர் ரெயில் மோதி பலி

    வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற வாலிபர் ஹெட்போனில் பாட்டு கேட்டு சென்ற போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள குமாரிமலையை சேர்ந்தவர் தேவராஜ் மகன் மார்ட்டின் (வயது 24). பி.இ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி அவர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இதையொட்டி நேற்று வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நண்பர்களுடன் புதுக்கோட்டையில் இருந்து நடந்து வந்தார். நீடாமங்கலம் -கொரடாச்சேரி இடையே உள்ள கிளரியம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் தனது செல்போனில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மார்ட்டின் உடல் துண்டாகி பலியானார்.

    இது தகவல் அறிந்த தஞ்சாவூர் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×