search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே ஆடுகள் திருடிய வாலிபர்கள் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே ஆடுகள் திருடிய வாலிபர்கள் கைது

    ஆண்டிப்பட்டி அருகே கிடையில் ஆடுகள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை காமன்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் தவசி (வயது40). இவர் சொந்தமாக கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கிருந்த 2 ஆடுகளை வாலிபர்கள் 2 பேர் திருடிக்கொண்டு சென்றனர். இதனை பார்த்ததும் தவசி அவர்களை விரட்டி பிடித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் விஜய் (25), ராமநாதன் மகன் சுரேஷ் (25) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×