search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் தாராபுரம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பிளிக்கை போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊராட்சி அலுவலர்கள் வந்து உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதன்பிறகு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி அலுவலர்கள் தெரிவித்ததின் பேரில் 1 மணி நேரமாக நீடித்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    Next Story
    ×