search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளி மாயம்- 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    X

    பாவூர்சத்திரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளி மாயம்- 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

    பாவூர்சத்திரம் அருகே குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற தொழிலாளி மாயமானதால் இன்று 2-வது நாளாக தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வணிகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 40). கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நண்பர்களான இவர்கள் இருவரும் மாலையில் கீழப்பாவூருக்கு வடக்கு பகுதியில் உள்ள மேலப்பாவூர் குளத்துக்கு குளிக்கச் சென்றனர். சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது.

    இந்தநிலையில் குளிக்க சென்ற சுடலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுடலை குளத்தில் மூழ்கியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே அதுபற்றி ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வீரர்கள் குளத்துக்கு விரைந்து வந்து சுடலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடினர். பின்பு இரவாகி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    சுடலையை தேடும் பணி இன்று 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்டது.
    Next Story
    ×