search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி
    X

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி ரெயில்வே குட்செட் தெருவை சேர்ந்தவர் போதும்பொன்னு. இவரது மகள் சரண்யா (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து சென்ற மின்வயர் அங்குள்ள முள் செடியின் மீது கிடந்தது. இதை அறியாத சரண்யா குளித்து விட்டு தனது துணிகளை அதன்மீது காயப் போட்டார். அப்போது எதிர்பாராத வீதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சரண்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×