என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையத்தில் பெட்டிக்கடைக்காரர் அடித்துக்கொலை
கடையம்:
நெல்லை மாவட்டம் கீழக்கடையத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது45). இவர் கடையம் ரெயில் நிலையம் அருகே சந்தையின் எதிரே டீக்கடை மற்றும் பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தார். தினமும் இரவில் இந்த கடையின் மேல் தளத்தில் அவர் படுத்து தூங்குவது வழக்கம்.
நேற்று இரவும் அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்றுகாலை வெகுநேரமாகியும் நரசிம்மனின் கடை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தம்பி ரவி வந்து பார்த்தார்.
மாடியில் சென்று பார்த்த போது அங்கு நரசிம்மன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அது பற்றி கடையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நரசிம்மனின் தலையில் கட்டையால் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. மேலும் அவரது வாயில் சாணத்தை ஊற்றியதற்கான தடயங்களும் இருந்தது. ஆகவே இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு நெல்லையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. தடயவியல் நிபுணர்களும் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நரசிம்மனின் மனைவி பெயர் விமலா. கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நரசிம்மன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது மர்மமாக உள்ளது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெண் தொடர்பு அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
நரசிம்மனின் கடை அருகில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான வாலிபர்கள் கூடி நின்று பேசுவது வழக்கம். அவர்கள் யாரேனும் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்