search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுரை
    X

    மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுரை

    மின்வாரிய பணிகளை விரைவாக முடித்திட மின்சார வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் - மத்திய அரசின் உதய் மின் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் பழனிசாமி, செல்வக்குமார சின்னையன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில், இந்திய அரசின் மின் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம், மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத்திட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் சுமார் ரூ.8.269 கோடியில் செயல்படுத்தவுள்ளது.

    இத்திட்டத்தில் 33 11 கி.வோ. துணைமின் நிலையங்கள், புதிதாக உயரழுத்த மின்பாதைகளும், தாழ்வழுத்த மின்பாதை களும், உயரழுத்த மின்பாதை களை வலுவாக்கல், புதியமின் மாற்றிகள் நிறுவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகள், அவினாசி, திருமுருகன்பூண்டி, அன் னூர், ஊத்துக்குளி, முத்தூர், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், மூலனூர், ருத்ராவதி, கன்னிவாடி, கணியூர், தளி, மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கரமநல்லூர், சாமளாபுரம் பேரூராட்சிகள் பயன்பெற உள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட உள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட மின்சார வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கான பணிநியமன ஆணையினையும் அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), நாகராஜன் (கோவை), கரைப்புதூர் ஏ. நடராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், திருப்பூர், பல்லடம், உடுமலை மேற்பார்வை பொறியாளர்கள், வட்ட செயற்பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×