search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  மணல் கடத்திய லாரி பறிமுதல்
    X

    விளாத்திகுளம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

    விளாத்திகுளம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மற்றும் கிளனரை கைது செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவில் சூரங்குடி மெயின் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் விளாத்திகுளம் அருகே விரிசம்பட்டி வைப்பாற்று படுகையில் இருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    எனவே லாரி டிரைவரான தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் முனியசாமி (வயது 32), கிளனரான வேம்பு மகன் இசக்கிமுத்து (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி உரிமையாளரான மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், பன்னீர்செல்வம், தீபன்ராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×