என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்26 Aug 2018 3:56 PM GMT (Updated: 26 Aug 2018 3:56 PM GMT)
சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
சிவகாசி:
ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விரிப்புகள், தட்டுகள், கோப்பை, உறிஞ்சு குழல்கள், தூக்குபைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், கொடிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று காலை சிவகாசியில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி ரதவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துணிப் பைகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதை திருப்பிக் கூறினர். பின்னர் பஸ் நிலையத்துக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி உதய குமார், திட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அதிகாரிகள், சிவகாசி ஒன்றிய அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விரிப்புகள், தட்டுகள், கோப்பை, உறிஞ்சு குழல்கள், தூக்குபைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், கொடிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று காலை சிவகாசியில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி ரதவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துணிப் பைகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதை திருப்பிக் கூறினர். பின்னர் பஸ் நிலையத்துக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி உதய குமார், திட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அதிகாரிகள், சிவகாசி ஒன்றிய அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X