search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
    X

    ராஜாக்கமங்கலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

    நண்பர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்புகாடு வைரா குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆரோன், (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆரோன் தனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் துறை பண்ணையூர் பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் குளிக்க சென்றார்.

    நண்பர்களுடன் ஆரோன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அவர், மூழ்கினார். இதைப்பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்களும், நண்பர்களும் ஆரோனை காப்பாற்ற முயன்றனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆரோன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. 

    இது குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×