என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய கூட்டணி அமைப்போம் - முத்தரசன்
நெல்லை:
நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் நன்றாக பணி செய்யும் அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் மீது தான் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ஆனால் தற்போது முதல்-அமைச்சர், துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர்கள் பதவி விலக வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய கூட்டணி அமைப்போம். தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயல் இழந்த துறையாக மாறிவிட்டது.
கடந்த 6 வருடங்களாக நிலவிய வறட்சி இந்த ஆண்டும் ஏற்பட கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். அதிகளவில் ஆற்றில் நீர் திறந்தவிடப் பட்டும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்வது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துகிறது. ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதால் கூட்டணி ஏற்படுவது என்பது வாய்ப்பில்லாத ஒன்று.
தி.மு.க. உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் தொடர்ந்து வகுப்பு வாதத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்