என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- தம்பிதுரை பேட்டி
கரூர்:
கரூரில் இன்று பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தீவிரவாதம் பெருகி வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தவறான கருத்து. மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆகவே தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
மு.க. அழகிரி தி.மு.க.வில் இருக்கும் போது தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்ட மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் இரட்டைஇலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #thambidurai #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்