search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- தம்பிதுரை பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- தம்பிதுரை பேட்டி

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தம்பிதுரை எம்பி பேசினார். #thambidurai #parliamentelection

    கரூர்:

    கரூரில் இன்று பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தீவிரவாதம் பெருகி வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தவறான கருத்து. மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆகவே தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    மு.க. அழகிரி தி.மு.க.வில் இருக்கும் போது தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்ட மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் இரட்டைஇலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #thambidurai #parliamentelection

    Next Story
    ×