search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
    X

    மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை காலை 4.40 மணி மின்சார ரெயில் வருகிற 27, 29 மற்றும் 31-ந்தேதியும், காலை 4.20 மணி ரெயில் 28, 30, அடுத்த மாதம் 1, 6, 8, 9-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 11.20 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், இரவு 12.15 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் அதிகாலை 2.45 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், அதிகாலை 4 மணி ரெயில் 27, 29, 31-ந்தேதி கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    27, 29, 31 ஆகிய தேதிகளில் தாம்பரம்-கும்மிடிப்பூண்டி மாலை 6.50 மணி ரெயில் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு காலை 6 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையேயும், சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணி ரெயில் 27, 28, 29, 30, 31, செப்டம்பர் 1, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் சூலூர்ப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை காலை 9.55 மணி ரெயில் 30, 31, 6, 7-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையேயும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

    இதனை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
    Next Story
    ×