என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.இ. கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ சிபாரிசோ தேவையில்லை - அண்ணா பல்கலைக்கழகம்
Byமாலை மலர்25 Aug 2018 2:01 PM GMT (Updated: 25 Aug 2018 2:01 PM GMT)
பி.இ. கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. #AnnaUniversity
சென்னை:
பொறியியல் கலந்தாய்வு குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஒரு சில கல்லூரிகள் மாணவர்களை மூளைச்சலவை செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதாக புகார்கள் வந்துள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை. மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்படி தங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும், முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ் மற்றும் பணத்தை கொடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம். தவறான தகவல் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேரும்படி கட்டாயப்படுத்தினால் அவர்களை குறித்து விசாரணை அலுவலகத்தில் புகார் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. #AnnaUniversity
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X