என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி பின்புறம் இளம்பெண் கொலை
Byமாலை மலர்25 Aug 2018 12:22 PM GMT (Updated: 25 Aug 2018 12:22 PM GMT)
திருவண்ணாமலை அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி பின்புறம் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). கணவரை பிரிந்து சிறுவயது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் அளித்த அரசு வேளாண்மை கல்லூரியின் பின்புறமுள்ள வனப்பகுதியில் இன்று காலை மரத்தில் ராணியின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி பார்வையிட்டனர்.
அப்போது, அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. மேலும் மரம் செங்குத்தாக இருப்பதால், ராணி அதில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.
ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிந்த போலீசார், ராணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ராணியின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). கணவரை பிரிந்து சிறுவயது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் அளித்த அரசு வேளாண்மை கல்லூரியின் பின்புறமுள்ள வனப்பகுதியில் இன்று காலை மரத்தில் ராணியின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி பார்வையிட்டனர்.
அப்போது, அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. மேலும் மரம் செங்குத்தாக இருப்பதால், ராணி அதில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.
எனவே, ராணி அடித்துக்கொலை செய்யபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிணத்தை தூக்கில் தொங்க விட்டு மர்மநபர்கள் தப்பியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த ராணி வேளாண் கல்லூரி பின்புற பகுதிக்கு எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கல்லூரி பின்புறம் இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்த வனப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி
ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிந்த போலீசார், ராணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ராணியின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X