search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
    X

    ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

    அம்மாபேட்டையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அம்மாபேட்டை:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சேதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    தற்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டையில் இன்று காலை பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

    இதில் லைசென்சு இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் எப்.சி. புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களும் சோதனையிடப்பட்டன. இதில் 2 ஆடடோக்கள் எப்.சி. புதுப்பிக்காமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.32 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #Helmet #tamilnadu
    Next Story
    ×