என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே வாலிபரை பிளேடால் கீறிய ரவுடிகள்
Byமாலை மலர்25 Aug 2018 11:42 AM GMT (Updated: 25 Aug 2018 11:42 AM GMT)
கூடலூர் அருகே பணம் கேட்டு வாலிபரை பிளேடால் கீறிய ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
கூடலூர் அருகே உள்ள கலிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 33). இவர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இரும்புக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நாங்கள் இந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர்.
இதனால் அவர் சத்தம் போடவே பிளேடால் புகழேந்தியை கீறி கொலை மிரட்டல் விடுத்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு அவர்களை பிடித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (23), வடக்கு ரத வீதியைச் சேர்ந்த அஜித் (19) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X