search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள்
    X

    வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்கள்

    வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்களை தாசில்தார் அனுப்பி வைத்தார்.

    சுரண்டை:

    நெல்லை மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வீ.கே.புதூர் தாலுகா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க வீ.கே. புதூர் தாசில்தார் நல்லையா கேட்டுக்கொண்டார். அதன்படி வீ.கே. புதூர் தாலுகா மக்களின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்பேரில் பொது மக்கள் அரிசி, கோதுமை மாவு, மைதா, ரவை, குடிநீர் பாட்டில்கள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பவுடர், கொசுவர்த்தி சுருள், கொசு விரட்டி, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, தலையணை, போர்வை, டீத்தூள், காபித் தூள், பால் பவுடர், சானிடரி நாப்கின், துணிகள், நிலக்கடலை, பயறு வகைகள், தேங்காய் எண்ணெய், ரஸ்க், பிஸ்கட், டார்ச், பேட்டரி ஆகிய பொருட்களை (பயன்படுத்திய ஆடைகளை தவிர்த்து) வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராளமாக வழங்கினர்.

    அதனை தாசில்தார் நல்லையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். கலெக்டர் அலுவலகம் மூலமாக அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    Next Story
    ×