search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
    X

    விளாத்திகுளம் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

    விளாத்திகுளம் அருகே விவசாயி வீட்டின் பீரோவை திறந்து 11 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் உத்தாண்டுராமன் விவசாயி. மனைவி சிவமாரி(46). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் சிவமாரி மற்றும் குடுப்பத்தினர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் சிவமாரி தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே வைத்திருந்த கம்மல் ஒரு ஜோடி, ஒரு மோதிரம், 3 பவுன் செயின் காணாமல் போயிருந்தது தெரிந்தது. மொத்தம் 11 பவுன் ஆகும்.

    இதனையடுத்து சிவமாரி காடல்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவப்பிரகாஷம் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×